Sunday 19th of May 2024 11:53:31 AM GMT

LANGUAGE - TAMIL
லீ ஷியன் லூங்
சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு!

சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு!


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சின் லுங் அறிவித்துள்ளார்.

உலகெங்கும் பேரவலமாக மாறியுள்ள கொரோனா அச்சுறுத்தல் சிங்கப்பூரிலும் வேகமாக பாரவிவருவதையடுத்து வரும் 7ம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான பணியிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சமூக இடைவெளி விதிகளை மீறுபவர்கள் மீது 6 மாத சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டொலர் அபராதத் தொகையும் விதிக்கப்படும். அதனால் பொதுமக்கள் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE